25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ராஜபாளையத்தில் ரயில்வே பீடர் ரோடு, மேடு, பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் விபத்து அச்சத்தில்மாணவர்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையத்தில் ரயில்வே பீடர் ரோடு, மேடு, பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் விபத்து அச்சத்தில்மாணவர்கள்.

ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் மேல்நிலைப் பள்ளிகள்,  ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரயில் பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்லும் நிலையில் பெயரளவிற்கு சீரமைக்கும் பணி நடப்பதை ஆய்வு செய்து முழுமையாக மேடு பள்ளங்கள் இன்றி சீரமைக்க வேண்டும்.

 ராஜபாளையம்நகர் பகுதி ரவுண்டானாவில் இருந்து ரயில்வே ஸ்டே ஷன் செல்வதற்கு ரயில்வேபீடர் ரோடு அமைந்துள்ளது. அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,இரண்டு தனியார் மேல்நிலைப் பள்ளிகள், துவக்கப்பள்ளி அமைந்துள்ள நிலையில் 24 மணிநேரமும் ரயில்கள் வந்து சென்று பயணிக்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

புது பஸ் ஸ்டாண்ட் செல்வதை எதிர்க்க பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள்இந்த ரோட்டை பயன்படுத்துகின்றன. ஆறாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் உபயோகிக்கும் இச்சாலையில் உள்ள சீரற்ற மேடு பள்ளங்கள் ஆபத்தை விளைவிப்பது டன், வேக கட்டுப்பாடு குறியீடுகள், பாதசாரிகள் நடைமேடை, எச்சரிக்கை பலகைகள் என எதுவும் செயல்பாடு இல்லை.முழுமையாக மேடு பள்ளங்கள் இன்றி ரோடுகளை மேம்படுத்திபாதுகாப்பு குறியீடுகள் அமைத்து வேகக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திவிபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News